அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது மற்றும் பாடலைக் கேட்பது போன்ற செயல்களால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார் வந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து கேரள அரசு தற்போது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி கேரள அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பை அனைத்து பஸ்களிலும் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments