NEWS

6/recent/ticker-posts

2021-ஜனவரி 1ஆம் தேதி முதல் சில மொபைல்களில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் இயங்காது

உலகம் முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனில் வாட்ஸ்அப் அப்ளிகேசனை ஒன்றாகும். வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பணம் அனுப்பும் வசதியையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் நாளை முதல் அதாவது புத்தாண்டு தொடங்கும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Os 4.0.3 புதிய ஐபோன் ஐஓஎஸ் மற்றும் கேஏஐஒஎஸ்-2.5.1, ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட செல்போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும். எனவே இந்த செல்போன்களை பயன்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ் அப் செயலியை பதிவிறக்கம் செய்து செல்போன் எண்ணை பதிவு செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 9 என்ற மென்பொருள் இல்லாத செல்போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோன் 4 உட்பட அதற்கு முன்பாக உள்ள அனைத்து ஐபோன் மாடல்களிலும் இந்த வாட்ஸ் அப் செயலி செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.


ஐபோன் 4s ,ஐபோன் 5, ஐபோன் 5s ,ஐபோன் 5c, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகிய செல்போன்களில் வாட்ஸ்அப் அப்டேட் செய்து பயன்படுத்தலாம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments