NEWS

6/recent/ticker-posts

BANK OF BARODA-வின் காகிதம் அல்லாத கடன் வசதி அறிமுகம்

சில்லறை வாடிக்கையாளர்களுக்கு காகிதமில்லா கடன் வழங்கும் டிஜிட்டல் தளத்தை பேங்க் ஆப் பரோடா அறிமுகப்படுத்தியுள்ளது.


பொதுத்துறை நிறுவனங்களில் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான பேங்க் ஆப் பரோடா சில்லரை வாடிக்கையாளர்களுக்கு காகிதம் எல்லாம் கடன் வழங்க டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் நேர செலவை குறைக்கும் வகையில் இந்த டிஜிட்டல் தளம் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இருப்பிடத்திலிருந்து அவர்கள் விரும்பும் நேரத்தில் டிஜிட்டல் வாயிலாக கடன் பெற முடியும். முன் அனுமதி வழங்கப்பட்ட ஒரு தனிநபர் கடன் ,ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை களை இணையம் மூலமாகவும் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீட்டுக் கடன் வாகனக் கடன் தனிநபர் கடன் ஆகியவற்றை பெறுவதற்கான முதன்மையான அனுமதி மனிதக் குறுக்கீடுகள் இன்றி 30 நிமிடங்களுக்குள் இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது.மேலும் நிரந்தர வைப்பு தொகைக்கான எதிரான காரணங்களும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படுவதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments