கோயம்புத்தூர் மாவட்டத்தில் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 46 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கபட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அதன் விவரங்கள்:
கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரங்கள்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள்,பால், மருத்துவம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள்/ சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள் அடுமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் திரையரங்குகள் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மேலும் மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப் படுகிறது. மேலும் உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து வாரசந்தை களுக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தைகளில் வெளிமாவட்ட/ மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர் நகராட்சி ஆணையர் உறுதிபடுத்த வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் இதுவரை 82 சதவீதம் மேல் பொதுமக்களுக்கு முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுளளது. மேலும் 20.09.2021 முதல் அனைத்து வணிக வளாகங்கள் துணிக் கடைகள் நகைக் கடைகள் மற்றும் இதர துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் முதல் தவணைகொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அனைத்து பொது மக்களின் கடமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk