வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த 4ஆம் தேதி தனியுரிமை கொள்கைகளை புதுப்பித்தது இதுகுறித்து தனது அறிவிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அனுப்பி உள்ளது .இந்த அறிவிப்பில் வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகளை மற்றும் தனியுரிமைக் கொள்கையை தங்களது ஒப்புதலை வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்யத் தவறினால் பயனாளர்களின் வாட்ஸ்அப் கணக்கை நீக்க வேண்டி இருக்கும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதனால் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு பின் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. வாட்ஸ்அப் நிறுவன விதிமுறைகள் நிபந்தனைகள் அல்லது அம்சங்களை நீங்கள் மீறினால் அது நிறுவனத்துக்கோ பயனாளர்களுக்கோ ஆபத்து அல்லது சட்டரீதியான வெளிப்பாடுகளை ஏற்படுத்தினால் எங்கள் சேவைகளுக்கான உங்களது அணுகலை நாங்கள் மாற்றவோ தடை செய்யவோ அல்லது நிறுத்தவோ முடியும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தாத நிலையில் இருந்தால் அந்த கணக்கு முடக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் வாட்ஸ்-அப் செயலியில் உங்களது செயல்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் எனவும் இதில் உங்கள் செயல்பாடுகள் தொடர்புகளின் நேரம் கால அளவு முறைகள் பதிவுகள் கோப்புகள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
Tamizhan New Techvsk-நண்பர்களே!
நீங்கள் ஒவ்வொருவரும் தமிழன் நியூ டெக்-ன் அங்கமே!
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்த பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துகள் ஆகும். Tamizhan New Techvsk இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. இங்கு பதிவிடப்படும் கருத்துக்களை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Tamizhan New Techvsk குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பொருத்தம் இல்லாத கருத்துக்கள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்- அன்புடன் Tamizhan New Techvsk