NEWS

6/recent/ticker-posts

முக்கிய செய்தி: மக்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி- TN News


திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட / தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டையினைக் குடும்ப அட்டைதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்துப் பெறும் முறை 2020 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இணையதள வழியில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையைச் செலுத்தவும் ,மீண்டும் திருத்தப்பட்ட அட்டையைப் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது அந்த முறையை மாற்றி குடும்ப அட்டைதாரர்கள் நகல் குடும்ப அட்டை பெற மண்டலம்/வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே பணம் செலுத்திடவும் அஞ்சல் வழியிலேயே தங்கள் முகவரியிலேயே பெற்றிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே, அட்டைக்கான கட்டணம் ரூ.20/-மற்றும் அஞ்சல் கட்டணம் ரூ.25/- ஆக மொத்தம் ரூ.45/-ஐ இணையவழியில் QR code அல்லது Net banking வழியாக அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையினை அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். 

இவ்வாறு அனுப்பி வைக்கும் முறையினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் செலுத்தி துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.

Post a Comment

0 Comments