NEWS

6/recent/ticker-posts

TET - ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர்களுக்கான புதிய செய்தி

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்களின் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது அதேபோன்று இந்த வருடமும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு வாகனங்களையும் தொடங்கி வைத்தார். 


மேலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம் எனவும், கட்டணம் செலுத்தாத Students வெளியே நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை போக்க  ஆசிரியர் காலி பணியிடங்களை TEACHER RECRUITMENT BOARD மூலம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.







Post a Comment

0 Comments